Kavithai - பே(ய்)சி

பக்கத்தில் நீ இருந்தால் பத்துகுதிரை பலமதை உணர்கிறேன்
பதமாய் உனைத் தொடுகையில் இனம்புரியாப் பரவசமாகிறேன்
உன் சிங்காரச் சிணுங்கல் எனைச் சிலிர்ப்பூட்டுகிறது
பத்துநிமிடம் உனைப்பிரிந்தாலும் பாரினில் எதன்மீதும் வெறுப்பாகிறது
என்னைவிட்டுப் பிரிவதுமில்லை விலகுவதுமில்லை நீ....
அறிவியலின் குழந்தை பெரிய கீர்த்தியுடைய சிறு மூர்த்தி
உன்னில் என்னை என்னில் உன்னைக் காண்கிறேன்
என் தங்கக்கண்மணியே செல்லக்கைப்பேசியே
 
by,
தி.பாலகுமார்   வேலுார்

0 comments:

Post a Comment