சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !


 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன்  தேர்வு 





சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2014-2015 போட்டியில் காரைக்குடி மையத்தில் கலந்துகொண்ட 24 போட்டியாளர்களில் 3 பேர் தேர்வாகி உள்ளனர்.அவர்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன் என்ற மாணவரும் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிவகங்கை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.தமிழகம் முழுவதும் மொத்தம் 54 மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு சுட்டி விகடன் சார்பாக பல கட்ட பயற்சி வழங்கப்பட உள்ளது.ஆரம்ப நிகழ்ச்சி சென்னையில் வருகிற 22/06/2014 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.இவ்வாறு தேர்வு ஆனவர்கள் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் சார்பாக கட்டுரைகள் எழுதலாம்.படத்துடன் இவர்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் வெளியவதுடன் குறிப்பிட்ட தொகையும்  பரிசாக  கிடைக்கும்.வெற்றி பெற்ற மாணவரையும்,போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியை தி .முத்து மீனாள் அவர்களையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து இப்பள்ளிக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும் சுட்டி விகடன் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
  இணைப்பினை பார்க்க 


Displaying img020.jpg






Displaying img022.jpg

0 comments:

Post a Comment