மனம் முழுதும் வெளியில் வலம் வர…

அரிதாய்
வீட்டிற்குள் இருக்கிறேன்
வீட்டிற்குள்ளிருக்கும்
எம்மிடம்

எப்பொழுதும்
வீட்டிற்குள்ளேயே
அடைப்பட்டிருக்கும்
எங்கள் நிலை
கொஞ்சமாச்சும் நினைப்பிங்களா?
ஆதங்கமாய் கேட்கும்
இல்லாளிடம்

உனக்கென்ன
எவ்வளவு பத்திரமாய்
சகலமும் அருகிருக்க
என்னைச்சொல்

அலைந்து திரிந்து
போதும் போதும் என்றாகிறது
சொல்லிக்கொண்டாலும்

வெறும் ஆளாய்
வீட்டிற்குள்

மனம் முழுதும் வெளியில் வலம் வர…

Mr. Ramajayam

0 comments:

Post a Comment