பரிசு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


 
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .

                                       நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் உயர் தொடக்க நிலை பிரிவில் ரூபாய் 400 பரிசு பெற்ற மாணவர்கள் கார்த்திகேயன் ,சந்தியா மற்றும் போட்டிக்கு தயார் செய்த ஆசிரியை முத்துமீனாள் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.போட்டியில் கழிவு நீர் மேலாண்மை என்கிற தலைப்பில் பங்கு கொண்டது தொடர்பாக மாணவர்கள் விரிவாக பேசினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கு பெற்று ரூபாய் 500 பரிசு பெற்ற மாணவர்கள் கார்த்திகேயன் ,சந்தியா   மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .

0 comments:

Post a Comment