எப்படி இருந்த நான்...இப்படி ஆயிட்டேன்...?

சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக...

தஞ்சாவூர்:

தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது...

பொள்ளாட்சி:

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது...



பெங்களூர்:

வென்க‌ல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது...

செங்கல்பட்டு:

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது.

மைசூர:

எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்து விட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது...

கோலார்:

குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது.


ஒகேநக்கலின்:

ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும்.

விருதாச்சலம்:

விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே.

வேதாரண்யம்:

வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு""
வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல...


மதுரை:

மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர். குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.

திண்டிவனம்:

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

குன்னூர்:

நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும்.


 ஆர்க்காடு:

தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை ‘ஆரங்கண்ணிச் சோழன்’ என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.



ஏர்க்காடு:

சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது.

.
தகவல் திரட்டியவர்
ந.பாலசாமி
எட்டாம் வகுப்பு
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
மூலத்துறை
கோவை மாவட்டம்

0 comments:

Post a Comment