தேவகோட்டை - மே -
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மறை எண்ணங்கள்
தொடர்பான கலந்துரையாடல் பயற்சி மாணவர்கள் ,பெற்றோர் முன்னிலையில்
நடைபெற்றது.
ஆங்கில ஏடுகளை
படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் .ஆங்கில அகராதியை படிக்க
வேண்டும்.ஒரு நாளைக்கு மூன்று வார்த்தைகள் வீதம் ஒரு மாதத்திற்கு 90
வார்த்தைகள் படித்து விடலாம்.மனிதன் பாம்பு,மனைவி , மைக் இவை மூன்றிற்கும்
பயப்பிடுகிறான்.மைக் முன்பு பேசுவதற்கு நாம் சிறுவயதிலேயே பள்ளியில்
படிக்கும்போதே மேடையில் பேசி பழக வேண்டும்.அதற்கு நிறைய வாய்ப்பு
பள்ளியில்தான் அமையும்.அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.எக்காரணத்தை
கொண்டும் நம் பெற்றோரை மற்றவர்களிடம் விட்டு கொடுக்க கூடாது.சாமியார்
ஒருவரிடம் வண்ணத்து பூச்சியை வைத்து இளைஞர்கள் நடத்தும் வேடிக்கையை கதையாக
விளக்கமாக எடுத்து கூறி,உன் வாழ்க்கை உன் கையில் என்பதை மாணவர்களுக்கு
எளிதாக புரியும் வகையில் எடுத்து கூறினார்.
சிறு வயதில் கனவு பெரிதாக இருக்க வேண்டும்.அப்துல் கலாம் அறிவுறுத்துவது
இதைத்தான் அறிவுறுத்துகிறார்.ஏன் ,எதற்கு என்று சிந்திக்க வேண்டும்.என்று
பேசினார்.கலந்துரையாடல் பயிற்சியில் 5 ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி மேலாளர்
கூறிய
பழமொழியை ஆங்கிலத்தில் கூறுமாறு கேள்வி எழுப்பினார்.உடனே மேலாளரும்
ஆங்கிலத்தில் பழமொழியை மொழிபெயர்த்து கூறினார்.கலந்துரையாடலில் மாணவி
சௌமியா ,அபிநயா ,சொர்ணாம்பிகா ,ராஜேஸ்வரி,,நடராஜன் ,மாணவர்
சன்முகப்ரகாஷ்ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி,கலாவல்லி,வாசுகி ஆகியோர் செய்திருந்தனார்.நிறைவாக 8 ம்
வகுப்பு மாணவர் அஜித் ஆங்கிலத்தில் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோரும்
கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
பட விளக்கம் : IMG - 368,369,376 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாண்டியன் கிராம வங்கியின் மண்டல மேலாளர் கவிஞர் சபாரெத்தினம் மாணவர் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நடத்தினார் .
0 comments:
Post a Comment